திங்கள், 10 அக்டோபர், 2016

ஸ்ரீ துர்கா ரோக நிவாரண அஷ்டகம்

ஸ்ரீ துர்கை சித்தர் அருளியது


துர்க்கையை மனதில் நினைத்து, "ரோக நிவாரண அஷ்டகம்" எனப்படும் இந்தப் பாடலைப் தினமும் பாராயணம் செய்து வந்தால் நோயற்ற சுகமான வாழ்வு அமையும் என்பது திண்ணம்.


பகவதி தேவி பர்வத தேவி 
பலமிகு தேவி துர்கையளே
ஜகமது யாவும் ஜயஜயவெனவே 
சங்கரி உன்னைப் பாடிடுமே 
ஹநஹந  தகதக பசபச வெனவே 
தளிர்த்திடு ஜோதியானவளே 
ரோக நிவாரிணி சோக நிவாரிணி
தாப நிவாரிணி ஜெயா துர்கா. ....... (01) 

தண்டினி_தேவி தக்ஷினி தேவி
கட்கினி தேவி துர்கையளே
தந்தன தான தனதன தான 
தாண்டவ நடன ஈஸ்வரியே 
முந்தினி தேவி முனையோலி சூலி
முனிவர்கள் தேவி மணித்தேவி
ரோக நிவாரிணி சோக நிவாரிணி
தாப நிவாரிணி ஜெயா துர்கா. ....... (02) 

காளினி நீயே காமினி நீயே
கார்த்திகை நீயே துர்கையளே 
நீலினி நீயே நீதினி நீயே 
நீர்நிதி நீயே நீர் ஒளியே 
மாலினி நீயே மாதினி நீயே 
மாதவி நீயே மான் விழியே 
ரோக நிவாரிணி சோக நிவாரிணி 
தாப நிவாரிணி ஜெயா துர்கா. ....... (03)  

நாரணி மாயே நான்முகன் தாயே 
நாகினி யாயே துர்கையளே 
ஊரணி மாயே ஊர்ருத்தாயே
ஊர்த்துவ யாயே ஊர் ஒளியே 
காரணி மாயே காருணி தாயே 
காணக யாயே காசினியே 
ரோக நிவாரிணி சோக நிவாரிணி 
தாப நிவாரிணி ஜெயா துர்கா. ....... (04)  

திருமகளானாய் கலைமகளானாய்
மலைமகளானாய் துர்க்கையளே
பெருநிதி யானாய் பேரறி வானாய்
பெருவலி வானாய் பெண்மையளே
நறுமலரானாய் நல்லவளானாய்
நந்தினி யானாய் நங்கையளே
ரோக நிவாரணி சோக நிவாரணி
தாப நிவாரணி ஜெய துர்க்கா. ....... (05)

வேதமும் நீயே வேதியள் நீயே 
வேகமும் நீயே துர்கையளே
நாதமும் நீயே நாற்றிசை நீயே 
நாணமும் நீயே நாயகியே 
மாதமும் நீயே மாதவம் நீயே 
மானமும் நீயே மாயவளே 
ரோக நிவாரிணி சோக நிவாரிணி 
தாப நிவாரிணி ஜெயா துர்கா. ....... (06)  

கோவுரை ஜோதி கோமள ஜோதி 
கோமதி ஜோதி துர்கையளே
நாவுரை ஜோதி நாற்றிசை ஜோதி 
நாட்டிய ஜோதி நாச்சியளே
பூவுரை ஜோதி பூரண ஜோதி 
பூத்தனர் ஜோதி பூரணியே 
ரோக நிவாரிணி சோக நிவாரிணி 
தாப நிவாரிணி ஜெயா துர்கா. ....... (07) 

ஜய ஜய சைல புத்திரி ப்ரஹ்ம 
சாரிணி சந்திர கண்டினியே 
ஜய ஜய கூஷ்மா மனதினி ஸ்கந்த 
மாதினி காத்யாயன்ய யளே
ஜய ஜய காலராத்திரி கௌரி 
ஸித்திதா ஸ்ரீ நவ துர்க்கையளே 
ரோக நிவாரிணி சோக நிவாரிணி 
தாப நிவாரிணி ஜெயா துர்கா. ....... (08)


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக