செவ்வாய், 13 மார்ச், 2018

ஸ்ரீ சுப்ரமண்ய அஷ்டோத்திர சதநாமாவளி


          01. ஓம் ஸ்கந்தாய நமஹ
          02. ஓம் குஹாய நமஹ
          03. ஓம் ஷண்முகாய நமஹ
          04. ஓம் பால நேத்ரஸுதாய நமஹ
          05. ஓம் ப்ரபவே நமஹ

          06. ஓம் பிங்களாய நமஹ
          07. ஓம் க்ருத்திகா ஸுனவே நமஹ
          08. ஓம் ஷிகிவாஹனாய நமஹ
          09. ஓம் த்விஷட் புஜாய நமஹ
          10. ஓம் த்விஷண் நேத்ராய நமஹ

          11. ஓம்ஷக்தி தராய நமஹ
          12. ஓம் பிஸிதாஸ ப்ரபஞ்சனாய நமஹ
          13. ஓம் தாரகாஸுர ஸம்ஹாரிணே நமஹ
          14. ஓம் ரஷோபல விமர்த்தனாய நமஹ
          15. ஓம் மத்தாய நமஹ

          16. ஓம் ப்ரமத்தாய நமஹ
          17. ஓம் உன்மத்தாய நமஹ
          18. ஓம் ஸுரஸைன்ய ஸுரக்ஷகாய நமஹ
          19. ஓம் தேவசேனாபதயே நமஹ
          20. ஓம் ப்ராக்ஞாய நமஹ

          21. ஓம் க்ருபாளவே நமஹ
          22. ஓம் பக்த வத்ஸலாய நமஹ
          23. ஓம் உமா ஸுதாய நமஹ
          24. ஓம் சக்தி தராய நமஹ

          25. ஓம் குமாராய நமஹ
          26. ஓம் க்ரெளஞ்சதாரணாய நமஹ
          27. ஓம் ஸேனான் யே நமஹ
          28. ஓம் அக்னிஜன்மனே நமஹ
          29. ஓம் விசாகாய நமஹ

          30. ஓம் சங்கராத்மஜாய நமஹ
          31. ஓம் சிவஸ்வாமினே நமஹ
          32. ஓம் கணஸ்வாமினே நமஹ
          33. ஓம் ஸர்வஸ்வாமினே நமஹ
          34. ஓம் ஸநாதனாய நமஹ

          35. ஓம் அனந்த சக்தயே நமஹ
          36. ஓம் அக்ஷோப்யாய நமஹ
          37. ஓம் பார்வதிப்ரிய நந்தனாய நமஹ
          38. ஓம் கங்கா ஸுதாய நமஹ
          39. ஓம் சரோத் பூதாய நமஹ
          40. ஓம் ஆஹூதாய (or ஆத்மபுவே) நமஹ

          41. ஓம் பாவகாத்மஜாய நமஹ
          42. ஓம் ஜ்ரும்பாய நமஹ
          43. ஓம் ப்ரஜ்ரும்பாய நமஹ
          44. ஓம் உஜ்ரும்பாய நமஹ
          45. ஓம் கமலாஸன ஸம்ஸ்துதாய நமஹ

          46. ஓம் ஏகவர்ணாய நமஹ
          47. ஓம் த்விவர்ணாய நமஹ
          48. ஓம் திரிவர்ணாய நமஹ
          49. ஓம் ஸுமனோகராய நமஹ
          50. ஓம் சதுர்வர்ணாய நமஹ

          51. ஓம் பஞ்சவர்ணாய நமஹ
          52. ஓம் ப்ரஜாபதயே நமஹ
          53. ஓம் அஹஸ்பதயே நமஹ
          54. ஓம் அக்னிகர்பாய நமஹ
          55. ஓம் சமீகர்பாய நமஹ

          56. ஓம் விச்வரேதஸே நமஹ
          57. ஓம் ஸுராரிக்னே நமஹ
          58. ஓம் ஹாரத்வர்ணாய நமஹ
          59. ஓம் சுபகராய நமஹ
          60. ஓம் வாஸவாய நமஹ

          61. ஓம் வடுவேஷப்ருதே நமஹ
          62. ஓம் பூஷ்ணே நமஹ
          63. ஓம் கபஸ்தினே நமஹ
          64. ஓம் கஹனாய நமஹ
          65. ஓம் சந்த்ரவர்ணாய நமஹ

          66. ஓம் களாதராய நமஹ
          67. ஓம் மாயாதராய நமஹ
          68. ஓம் மஹாமாயினே நமஹ
          69. ஓம் கைவல்யாய நமஹ
          70. ஓம் ஷங்கராத் மஜாய (or ஸுதாய) நமஹ

          71. ஓம் விச்வயோனயே நமஹ
          72. ஓம் அமே யாத்மனே நமஹ
          73. ஓம் தேஜோநிதயே நமஹ
          74. ஓம் அனாமயாய நமஹ
          75. ஓம் பரமேஷ்டினே நமஹ

          76. ஓம் பரப்ரஹ்மணே நமஹ
          77. ஓம் வேதகர்பாய நமஹ
          78. ஓம் விராட்ஸுதாய நமஹ
          79. ஓம் புளிந்த்கன்யாபர்த்ரே நமஹ
          80. ஓம் மஹாஸாரஸ்வத ப்ரதாய நமஹ

          81. ஓம் ஆச்ரிதாகில தாத்ரே நமஹ
          82. ஓம் சோராக்னாய நமஹ
          83. ஓம் ரோக நாசனாய நமஹ
          84. ஓம் அனந்தமூர்த்தயே நமஹ
          85. ஓம் ஆனந்தாய நமஹ

          86. ஓம் சிகண்டிக்ருத கேதனாய நமஹ
          87. ஓம் டம்பாய நமஹ
          88. ஓம் பரம டம்பாய நமஹ
          89. ஓம் மஹாடம்பாய நமஹ
          90. ஓம் வ்ருஷாகபயே நமஹ

          91. ஓம் காரணோ பாத்த தேஹாய நமஹ
          92. ஓம் காரணாதீத விக்ரஹாய நமஹ
          93. ஓம் அனீச்வராய நமஹ
          94. ஓம் அம்ருதாய நமஹ
          95. ஓம் ப்ராணாய நமஹ

          96. ஓம் ப்ராணாயாம பாராயணாய நமஹ
          97. ஓம் வ்ருத்த ஹந்த்ரே நமஹ
          98. ஓம் வீரக்னாய நமஹ
          99. ஓம் ரக்த ச்யாம களாய நமஹ
          100. ஓம் மஹதே நமஹ

          101. ஓம் ஸுப்ரஹ்மந்ஞாய நமஹ
          102. ஓம் குஹாப்தாய நமஹ
          103. ஓம் ப்ரஹ்மந்ஞாய நமஹ
          104. ஓம் ப்ராஹ்மண ப்ரியாய நமஹ
          105. ஓம் வம்ச விருத்திகராய நமஹ

          106. ஓம் வேத வேத்யாய நமஹ
          107. ஓம் அக்ஷய பலப்ரதாய நமஹ
          108. ஓம் மயூர வாஹனாய நமஹ

இதி ஸ்ரீ சுப்பிரமண்ய அஷ்டோத்ர சத பாராயண நாமவளி சம்பூர்ணம்

தொகுப்பு : ஸ்ரீ ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- || 


குறிப்பு: தங்கள் வருகைக்கு நன்றி...! மேலும் இப்பக்கத்தில் உருவாகும் பதிவுகள் எங்களது திருநெறிய தமிழோசை - சைவமும் தமிழும் குழும முயற்சியில் உருவானவை, இதனை பிரதி(Copy) எடுக்க அனுமதி கிடையாது.

மாங்கல்ய பலம் தரும் சாவித்திரி விரதம்

மாசியும் பங்குனியும் கூடும் வேளையில் நோற்கப்படுவது காரடையான் நோன்பு. மாசி மாத கடைசி நாள் இரவு ஆரம்பித்து பங்குனி முதல் நாள் காலையில் முடிப்பர். (இவ்வாண்டு 14.03.2018 இரவு முதல் 15.03.2018 காலை வரை). இந்த நோன்பை காமாட்சி நோன்பு, கௌரி விரதம், சாவித்திரி விரதம் என்றும் சொல்வார்கள்.

சாவித்திரி தன் கணவனை எமதர்ம ராஜனிடமிருந்து மீட்டது இந்த நாளில் தான். சுமங்கலிப் பெண்கள் தங்கள் கழுத்தில் மங்கல நாண் நிலைக்கவும்; தங்களது கணவன் நீண்ட ஆயுளோடு வாழ வேண்டும் என்பதற் காகவும் சாவித்திரி அம்மனை வேண்டி இந்த விரதம் இருப்பார்கள். விரத பூஜையில் காமாட்சி அம்மனையும், கலசத்தையும் (கலச பூஜை) வழிபடுவார்கள்.


அம்மனுக்கு கார் அரிசியும் காராமணியும் கலந்து செய்த அடையும், உருகாத வெண்ணெயும் நிவேதனம் செய்வார்கள். நோன்புச் சரட்டில் மலரைக் கட்டி பூஜையில் வைத்து கழுத்தில் கட்டிக் கொள்வார்கள். "மாசிக்கயிறு பாசி படியும்" என்று, பங்குனி முதல் நாளில் புதிய மங்கலச் சரடை மாற்றிக்கொள்வது விசேஷமானதாகக் கருதப்படுகிறது.

சாவித்திரி விரதத்தின் சிறப்பை புராணம் விளக்குகிறது. நெடுநாட்கள் பிள்ளைப் பேறு இல்லாமலிருந்த அசுபதி மன்னன், மகப்பேறு வேண்டி தான - தர்மங்கள் செய்து வந்தான். அதன் பயனாக ஒரு பெண் குழந்தை பிறந்தது. சாமுத்திரிகா லட்சணங்கள் அனைத்தும் கொண்டிருந்த அக்குழந்தைக்கு சாவித்திரி என்று பெயரிட்டனர். அவளுக்கு எட்டு வயதாகும்போது அங்கு வந்த நாரதர், அவளது எதிர்காலத்தைப் பற்றி கூறிச் சென்றார். தாய் - தந்தையரை தெய்வமாக மதிக்கும் சத்யவான் என்பவனை அவள் மணந்து கொள்வாள் என்றும்; சத்யவான் 21 ஆண்டுகள் வரைதான் வாழ்வான் என்றும் கூறியிருந்தார்.

சாவித்திரி சத்யவானையே மணந்து, அவனது வாழ்நாள் அதிகரிக்க பல விரதங்களையும் நோன்புகளையும் அனுஷ்டித்தாள். சத்யவானும் சாவித்திரியும் வேற்று நாட்டு அரசனால் நாடு கடத்தப்பட்டு ஒரு கானகத்தில் வசித்து வந்தனர். நாரதர் கூறியிருந்தபடி சத்யவானின் இறுதிநாள் வந்தது. அன்று சாவித்திரி தடுத்தும் கேளாமல் அவன் விறகு சேகரிக்க காட்டுக்குப் புறப்பட்டான். சாவித்திரியும் உடன் சென்றாள். நண்பகல் வேளையில் சத்யவான் சாவித்திரியின் மடியில் தலைவைத்து படுத்திருந்தபோது, எமதர்ம ராஜன் அவன் உயிரைப் பறித்துச் சென்றான். சாவித்திரியின் கற்புத் திறத்தால் எமதர்மனின் உருவம் அவள் கண்களுக்குத் தெரிந்தது. அவள் தன் கணவனின் உடலைக் கீழே கிடத்தி விட்டு, எமனைப் பின்பற்றிச் சென்றாள்.

அவளது காலடி ஓசை கேட்டுத் திரும்பிய எமனின் பாதங்களில் விழுந்து சாவித்திரி வணங்கினாள். அவளை "தீர்க்க சுமங்கலி பவ" என்று எமன் வாழ்த்தினான். சாவித்திரி எமனை வேண்டி பல வரங்களைப் பெற்றாள். அதில் வம்சவிருத்தி அருளும்படி வேண்டிய வரம் எமனைத் திகைக்க வைத்தது. சாதுர்யமாக தன் கணவனின் உயிரை அவள் மீட்டதை அறிந்தான் எமன்.

சாவித்திரியின் பதிபக்தியை மெச்சிய எமன், "இதுவரை என்னை யாரும் பார்த்தது இல்லை. உன் கற்பின் மகிமையால் நீ வெற்றி பெற்று விட்டாய். நீ என்னிடம் கேட்டுப் பெற்ற வரங்கள் அனைத்தும் நிறைவேறும். உலகம் உள்ளளவும், உன்னை நினைத்து மாசியும் பங்குனியும் சேரும் சமயத்தில் விரதமிருப்பவர்களுக்கு உன் ஆசி கிட்டும். அவர்கள் மனமொத்த தம்பதிகளாக வாழ்வார்கள்'' என ஆசி கூறி அனுப்பினான்.


சாவித்திரி காட்டில் கணவனை விட்டுச் சென்ற இடத்திற்குத் திரும்பி வந்து, அவன் உடலைத் தன் மடியில் கிடத்தினாள். சிறிது நேரத்தில் தூக்கத்திலிருந்து விழிப்பதுபோல் சத்யவான் விழித்தெழுந்து, "உன்னைப் போன்ற பெண் ஒருத்தி என்னை மீட்டு வந்ததாகக் கனவு கண்டேன்'' என்று கூறினான். அவன் உயிரை எமன் எடுத்துச் சென்றதையும்; எமனுடன் போராடி அவன் உயிரையும், மேலும் பல வரங்களையும் பெற்று வந்த விவரத்தையும் சாவித்திரி கூறினாள்.

சாவித்திரியும் சத்யவானும் தங்கள் குடிலுக்குத் திரும்பி வந்தனர். சாவித்திரி எமனிடம் பெற்ற வரத்தின்படி சத்யவான் மீண்டும் தன் நாட்டைப் பெற்றான். அவனது பெற்றோர்கள் கண்பார்வை பெற்றனர். சாவித்திரி அனுஷ்டித்து வந்த நோன்பு அவளது காலம் வரை கௌரி நோன்பு எனக் கூறப்பட்டது. அதன் பின்னர் சாவித்திரி நோன்பு என்ற பெயர் பெற்றது. சாவித்திரி காட்டில் இருந்து இந்த நோன்பை மேற்கொண்டபோது அங்கு அவளுக்குக் கிடைத்த காராமணி, கார் அரிசி ஆகியவற்றைக் கொண்டு காரடை செய்து நிவேதனம் செய்தாள். அதனால் இந்த நோன்பு நோற்கும் பெண்கள் நிவேதனத்தில் காரடை வைத்து, "உருகாத வெண்ணெயும் ஓரடையும் நான் தருவேன்; ஒருக்காலும் என் கணவர் என்னைப் பிரியாதிருக்க வேண்டும்" என வேண்டி நோன்புக் கயிறு கட்டிக் கொள்வார்கள்.

திருமணமான பெண்கள் தங்கள் மாங்கல்ய பாக்கியம் நிலைக்க, கணவரை நோய் நொடியின்றி காக்க இந்த நோன்பு கவசமாக இருக்கிறது. இந்த நோன்பை நோற்பதன் பலனாக சாவித்திரி நூறு பிள்ளைகளுடன் சௌபாக்கியவதியாய் பல்லாண்டு காலம் வாழ்ந்தாள் என்பது புராணம். அவளது சரித்திரத்தை நோன்பு தினத்தில் படிப்பதால் சகல சௌபாக்கியங்களும் பெறலாம்.

நன்றி : கே சுவர்ணா

தொகுப்பு : ஸ்ரீ ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- || 


குறிப்பு: தங்கள் வருகைக்கு நன்றி...! மேலும் இப்பக்கத்தில் உருவாகும் பதிவுகள் எங்களது திருநெறிய தமிழோசை - சைவமும் தமிழும் குழும முயற்சியில் உருவானவை, இதனை பிரதி(Copy) எடுக்க அனுமதி கிடையாது.

ஷட்திலா ஏகாதசி (மாசி மாதம் கிருஷ்ண பட்சம்)

ஏகாதசி என்பது ஒவ்வொரு பக்தர்களுக்கும் ஏகாந்த தினமாகவே உள்ளது. மோட்சத்தை அளிக்கும் விரதத்தை கடைபிடிக்க வழி ஏற்படுத்தியிருக்கும் ஏகாதசியால் ஏகாந்தம் ஏற்படாமல் எப்படி இருக்கும். அமாவாசை, பவுர்ணமிக்கு அடுத்த 11 நாட்களில் ஒரு ஏகாதசி என்ற கணக்கில் ஆண்டுக்கு 24 அல்லது 25 ஏகாதசிகள் வருகின்றன. ஆண்டு முழுவதும் வரும் ஏகாதசிகளுக்கு ஒவ்வொரு பெயர்களும், அந்தந்த ஏகாதசி தினங்களில் இருக்கும் விரதங்களால் பக்தர்களுக்கு கிடைக்கப்பெறும் நன்மை பயக்கும் பலன்களும் பலவாறு வகுத்து கூறப்பட்டுள்ளன.

மாசி மாதம் கிருஷ்ண‌ பட்சத்தில்(தேய்பிறை) வரும் ஏகாதசி திதியை ஷட்திலா ஏகாதசியாக கொண்டாடுவர். ஷட்திலா ஏகாதசியின் விரத மகிமையை நாம் காண்போம்.


மனதிற்கு மிகவும் ஆனந்தத்தையும், மகிழ்ச்சியையும் அளிக்கும் ஏகாதசி விரத மஹாத்மியத்தின் உன்னதக் கதைகளை ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா வாயிலாக கேட்டு மகிழ்ந்த அர்ஜூனன், பக்தியுடனும், சிரத்தையுடனும் ஸ்ரீ கிருஷ்ணரை வணங்கி "மதுசூதனா தாங்கள் கூறிய ஏகாதசி விரத மஹாத்மியக் கதைகள் என் மனதிற்கு அபார மகிழ்ச்சியும், சாந்தியும் தருகிறது. ஆகவே ஜகதீஸ்வரா, மற்ற ஏகாதசி விரத மஹாத்மியக் கதைகளையும் கேட்டு மகிழ என் மனம் விழைகிறது. தாங்கள் க்ருபை புரிய வேண்டும்." என்று வேண்டினான். 

இதைக் கேட்டு மகிழ்ந்த ஸ்ரீ கிருஷ்ணர் "பார்த்தா! இப்பொழுது மாசி மாதம் கிருஷ்ண பட்சத்தில் வரும் சட்திலா ஏகாதசி விரத மஹாத்மியக் கதையை உனக்குக் கூறுகிறேன் கேள்" என்று கூறலுற்றார். 

ஒரு சமயம் தாலப்ய ரிஷி, புலஸ்த்ய ரிஷியிடம் "முனிசிரேஷ்டரே! பூமியில் மனிதர்கள் மற்றவர்களின் செல்வத்தை திருடுதல், அடுத்தவர்களின் வளர்ச்சியைக் கண்டு பொறாமை கொள்ளுதல், பிரம்மஹத்யா போன்ற மாபாதகமான பாவச்செயல்களைச் செய்தல் ஆகியவற்றை, குரோதம், பொறாமை, உணர்ச்சியின் உத்வேகம் மற்றும் அறிவின்மையின் வசப்பட்டு செய்கின்றனர். பின்னர் "ஐயோ! நான் எத்தகைய மாபாதகத்தை செய்து விட்டேன்" என மனம் வருந்துகின்றனர். 

"முனிசிரேஷ்டரே அத்தகைய மனம் வருந்தும் மனிதர்கள் நரகம் செல்லுவதிலிருந்து விடுபட ஏதேனும் உபாயம் உள்ளதா? தான, தர்மம் மோட்சப்பிராப்தியை அளிக்கும் என்றால் எவ்வித தானத்தின் புண்ணிய பிரபாவத்தால் அவர்கள் நரகம் அடைவதிலிருந்து விடுபட முடியும்? தயவு கூர்ந்து நல்வழியைத் தாங்கள் தான், அவர்களுக்கு கூறி அருள வேண்டும்." என்றார்.

புலஸ்த்ய ரிஷி "மஹாபாகா! இவ்வுலக வாழ் மக்கள் அனைவருக்கும் பயனை அளிக்கும் முக்கியமான, அர்த்தமுள்ள, கம்பீரமான கேள்வியை கேட்டுள்ளாய். உன் கேள்விக்கு பதிலாக, இந்திரன் முதலான தேவர்களும் கூட இதுவரை அறிந்திராத ரகசியத்தை அவசியம் கூற வேண்டி உள்ளது. கவனத்துடன் கேள். மாசி மாதம் அதிகாலையில் ஸ்நானம் முதலியவற்றை முடித்து சுத்தமாக இருப்பதுடன், இந்திரியங்களை உள்ளடக்கி, காமம், குரோதம், லோபம், மோகம், பொறாமை, அகங்காரம் இவற்றை விட்டொழித்து பகவான் ஸ்ரீ விஷ்ணுவை த்யானம் செய்ய வேண்டும். 

பூச நட்சத்திர தினத்தன்று பசுவின் சாணம் பூமியில் விழும் முன்பே சேமித்து, அதனுடன் பஞ்சு மற்றும் எள் சேர்த்து 108 பந்து உருண்டைகளாக செய்து வைத்தல் வேண்டும். மூல நட்சத்திரமும், ஏகாதசி திதியும் சேர்ந்து வரும் நன்நாளில் புண்ணியம் அளிக்கும் நற்கருமங்களை செய்ய வேண்டும். தேவர்களுக்கெல்லாம் தேவனான மகாவிஷ்ணுவிற்கு விமரிசையாக அபிஷேக ஆராதனைகள் செய்து, நாள் முழுதும் கீர்த்தனை, நாமஸ்மரணம் என்று ஏகாதசி விரதம் அனுஷ்டிக்க வேண்டும். அன்று இரவு கண் விழித்து முன்பு செய்து வைத்திருக்கும் 108 பந்து உருண்டைகளை கொண்டு யாகம் செய்ய வேண்டும்.. மறுநாள் தூப, தீபம், நைவேத்யத்துடன் பகவான் விஷ்ணுவின் பூஜை செய்து கிச்சடியை நைவேத்யமாக அர்ப்பணிக்க வேண்டும். அன்று மஹாவிஷ்ணுவிற்கு பால்பேடா, தேங்காய், சீதாப்பழம், கொய்யாப்பழம், பூசணி, (இவை கிடைக்காதபட்சத்தில் பாக்கு) இவற்றை கீழ்க்கண்ட பிரார்த்தனையுடன் அர்க்யம் கொடுத்தல் வேண்டும்.

அர்க்ய பிரார்த்தனை: "பகவான் தாங்கள் திக்கற்றவர்களுக்கு புகலிடம் அளிப்பவர். இவ்வுலக மாயையில் மூழ்கி இருப்பவர்களை மீட்பவர். புண்டரீகாக்ஷா, தாமரை மலரை ஒத்த கண்களை கொண்டவரே! விஸ்வவிதாதா (உலகைப் படைத்தவரே! சுப்ரமண்யா!! ) நீங்கள் தேவி லக்ஷ்மீ சகிதம் அடியேன் அளிக்கும் சிறிய அர்க்யத்தை ஏற்க வேண்டும்." அதற்குப் பிறகு பிராம்மணருக்கு ஜலம் நிரம்பிய கும்ப கலசம், குடை, காலணி, அங்கவஸ்திரத்துடன் உடை, எள் இவற்றை தானம் அளிக்க வேண்டும். முடிந்தால் பிராம்மணருக்கு பசுவுடன் எள் தானம் அளிப்பதும் மிகுந்த புண்ணியத்தை நல்கும். இப்படி எள் தானம் செய்ததின் அளவிற்கு ஏற்ப அத்தனை ஆயிரம் வருட காலம் ஸ்வர்க்கத்தில் வசிக்கும் பிராப்தியை பெறுவர். 

          01. எள் நிரம்பிய நீர் ஸ்நானம்  
          02. எள்ளினை உடம்பெங்கும் பூசிக் கொள்தல்
          03. எள் ஹோமம் (தில ஹோமம்)  
          04. எள்ளை உட்கொள்ளுதல்
          05. எள்ளை தானமாக பெறுதல் மற்றும்
          06. எள்ளை தானமாக அளித்தல் 

இப்படி ஆறு வகையான எள் பயன்பாடு சட்திலா (ஆறு வகையான எள்) என அழைக்கப்படுகிறது. இவ்வகை பயன்பாட்டால், அநேக பாபங்கள் விலகுகின்றன. என்று கூறிய புலஸ்திய ரிஷி, இப்பொழுது ஏகாதசி விரத கதையை கூறுகிறேன், கேள். என்றார். 

ஒரு நாள் நாரத முனி பகவான் விஷ்ணுவிடம் சட்திலா ஏகாதசியை பற்றி வினவினார், "பகவான்! தங்களுக்கு என்னுடைய அநேக கோடி நமஸ்காரங்கள். சட்திலா ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பதால் கிட்டும் புண்ணியம் என்ன? அதன் மஹிமை என்ன? தயவு செய்து கூறுங்கள்." என்றார்.

நாரத ரிஷியின் வேண்டுகோளைக் கேட்ட பகவான் ஸ்ரீ விஷ்ணு ஹே நாரதா! உண்மையில் நடந்த ஒரு சத்ய நிகழ்ச்சியை விவரிக்கிறேன். கவனத்துடன் கேள்.என்றார். பண்டைய காலத்தில் பூமியில் ஒரு பிராமண ஸ்திரீ வாழ்ந்து வந்தாள். அவள் எப்பொழுதும் விரதங்களை நியமத்துடனும், பக்தியுடனும் கடைபிடித்து வந்தாள். ஒரு சமயம் விரதத்தை ஒரு மாதம் வரை கடைபிடித்ததால், சரீரம் மிகவும் பலவீனமாயிற்று. அவள் பக்தியில் சிறந்து விளங்கினாள். பிராமணர்களுக்கும், கன்யைக‌ளுக்கும் தானங்களை, அவர்கள் மனமகிழ்ச்சி அடையும் அளவுக்குச் செய்தாள். சிறந்த புத்திமானாகவும் விளங்கினாள்.

தானம் பெற தகுதி வாய்ந்த அத்தனை நல் உள்ளங்களுக்கும் வேண்டிய அளவு தானம் செய்தாலும், அவள் பக்தியின் ஒரு அம்சம் என்னை மிகவும் ஆச்சரியப்படுத்தியது. அது என்னவென்றால், தர்மங்களில் தலைசிறந்த அன்னதானத்தை பிராமணர்களுக்கோ அல்லது தேவர்களுக்கோ, அவள் ஒருபொழுதும் செய்ததில்லை. என் எண்ணமெல்லாம், பிராமண ஸ்திரீ சிரத்தையுடன் அனுஷ்டித்த விரதங்களின் பலனால் தன் சரீரத்தை பரிசுத்தமாக்கிக் கொண்டதால், அவளுக்கு விஷ்ணுலோகம் நிச்சயம் கிட்டும். ஆனால் அன்னதானத்தின் பலன் இல்லாமல் ஜீவிப்பது மிகவும் கடினம். ஏனெனில் அன்னதானம் ஆத்மாவிற்கு சாந்தியை அளிக்கக்கூடியது. ஆகவே அவள் வைகுண்ட வாழ்க்கையை எளிதாக்க இக்குறையை நீக்க எண்ணினேன். இந்த எண்ணத்துடன் பூலோகம் சென்று பிராமண ஸ்திரீயிடம் அன்னப்பிட்க்ஷை வேண்டி நின்றேன். 

பிராமண ஸ்திரீ "ஹே மஹாராஜரே! நீங்கள் எதற்காக வந்துள்ளீர்?" என்றாள். நானும் "பிட்க்ஷை வேண்டி வந்துள்ளேன்" என்றேன். அதைக் கேட்டு அவள் மணலால் ஆன ஒரு பிண்டத்தை தானமாக அளித்தாள். அதை வாங்கிக் கொண்டு நான் ஸ்வர்க்கத்திற்கு திரும்பி வந்து அவள் அளித்த மண் பிண்டத்தை வைத்து ஒரு அழகான வீடு அவளுக்காக அமைத்தேன். வீடு அழகாக அமைந்தது. ஆனால் வீட்டில் தான்யங்கள், இருக்கைகள், மற்ற எதுவும் இல்லாமல் அவள் அளித்த மண்னைப் போல் அமைந்து இருந்தது. சில காலம் கழித்து, அந்தப் பிராமண ஸ்திரீ மரணத்திற்குப் பிறகு ஸ்வர்க்கத்திற்கு வந்தாள். மணலால் ஆன பிண்டத்தை தானம் அளித்த பலனால் அவளுக்கு கிடைத்த இடத்தில் மாமரத்துடன் கூடிய வீடு இருந்தது. ஆனால் அவ்வீட்டில் வேறு எதுவும் இல்லாமல் சூன்யத்துடன் இருந்தது. அதைக் கண்டு அவள் பயத்துடனும், கோபத்துடனும் என்னிடம் வந்து, "பகவான், அநேக விரதங்களை கடைப்பிடித்து உங்களுக்கு பூஜை செய்தேன். ஆனால் என் வீட்டில் வேறு எந்த வஸ்துக்களும் இல்லை. இதற்கு என்ன காரணம்.?" என்றாள்.

அதற்கு நான் "நீ உன் இல்லத்திற்குச் செல்வாயாக‌. அங்கு உன்னைக் காண தேவ ஸ்திரீகள் வருவர். அவர்கள் வரும் பொழுது, அவர்களிடம் சட்திலா ஏகாதசி விரத மஹாத்மியம் மற்றும் பூஜை விதியைப் பற்றி கேட்கவும். அவர்கள் சொல்லும் வரை வீட்டின் கதவுகளை திறக்க வேண்டாம்." என்றேன். பகவானின் வார்த்தைகளைக் கேட்டு அவள் வீட்டிற்கு திரும்பினாள். தேவ ஸ்திரீகள் அவளைக் காண வந்து வீட்டின் கதவுகளை திறக்க முற்பட்ட பொழுது பிராமண ஸ்திரீ அவர்களிடம், "நீங்கள் என்னைக் காண வேண்டும் என்றால், முதலில் சட்திலா ஏகாதசி விரத மஹாத்மியத்தை கூறவும்." என்றாள்.

அவர்களில் ஒரு தேவ ஸ்திரீ "இது தான் உன் விருப்பம் என்றால், நான் உனக்கு சட்திலா ஏகாதசி விரதம் மற்றும் அதன் மஹாத்மியம், பூஜை விதி ஆகியவற்றைப் பற்றி சொல்கிறேன், கவனத்துடன் கேள்" என்றாள். அவள் சட்திலா ஏகாதசி மஹாத்மியத்தை கேட்டு முடித்தவுடன், பிராமண ஸ்திரீ வீட்டின் கதவுகளை திறந்தாள்.

தேவ ஸ்திரீகள் தாங்கள் எதிர்ப்பார்த்தபடி இல்லாது ஒரு பிராமண ஸ்திரீயை கண்டு மிகவும் வியந்தனர். அவளை, மற்றவர்களிடமிருந்து மாறுபட்டவளாகவும் வித்தியாசமானவளாகவும் கண்டு வியந்து சென்றனர். பிராமண ஸ்திரீயும் அந்த தேவஸ்திரீ கூறியபடி சட்திலா ஏகாதசி விரதத்தை அனுஷ்டித்தாள். அதன் புண்ணிய பலனால் அவள் வீடு தனம், தான்யங்களால் நிரம்பி வழிந்தது.

"ஹே அர்ஜூனா, மனிதர்கள் அறியாமையை விட்டொழித்து சட்திலா ஏகாதசி விரதத்தை அவசியம் அனுஷ்டிக்க வேண்டும். அதனால் மனிதர்களின் நிரந்தர ஆரோக்கியத்தை பெறுவர். இதனால் அனைத்து பாபங்களும் அழியும்" என்று கூறி முடித்தார் ஸ்ரீ கிருஷ்ணர்.

கதாசாரம்: இந்த விரதத்தினால் நமக்கு சரீர சுத்தி, ஆரோக்கியம் மட்டுமல்லாமல், அன்னம், எள் முதலியவற்றை தானம் செய்வதால் தனம், தான்ய விருத்தியும் கிட்டுகிறது. இதனால் இங்கு எந்த பொருட்களை தானம் செய்கிறோமோ, அவை யாவும் மரணத்திற்குப் பிறகு நமக்கு மேலுலகத்திலும் கிட்டுகிறது என்பது புலனாகிறது. இதன் அர்த்தம் என்னவென்றால், தார்மீக கார்யங்களை அவற்றின் விதிப்படி செய்யும் பொழுது, கூடவே தானங்களையும் அவசியம் செய்ய வேண்டும். தான, தர்மங்கள் இல்லாமல் எந்தவொரு தார்மீக கார்யங்களும் பூரணமடைவதில்லை என்று சாஸ்திரங்கள் வர்ணிக்கின்றன்.

நன்றி : Kshetra Yaatra

தொகுப்பு : ஸ்ரீ ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


|| ----------- ஓம் நமோ பகவதே வாசுதேவாய ----------- ||

|| ----------- ஓம் நமோ நாராயணா ----------- ||


குறிப்பு: தங்கள் வருகைக்கு நன்றி...! மேலும் இப்பக்கத்தில் உருவாகும் பதிவுகள் எங்களது திருநெறிய தமிழோசை - சைவமும் தமிழும் குழும முயற்சியில் உருவானவை, இதனை பிரதி(Copy) எடுக்க அனுமதி கிடையாது.

திங்கள், 12 மார்ச், 2018

திருமாலின் நூற்றியெட்டு போற்றி திருநாமங்கள்

ஏகாதசி மற்றும் திருவோண விரதமிருப்பவர்கள் இந்த 108 போற்றியை பாராயணம் செய்தால் எண்ணியது ஈடேறும்.


          01 ஓம் அன்பின் சுடரே போற்றி
          02 ஓம் அளவிலா அறமே போற்றி
          03 ஓம் அருட்கடலே போற்றி
          04 ஓம் அரவ சயனா போற்றி
          05 ஓம் அக்காரக்கனியே போற்றி

          06 ஓம் அரவிந்தலோசனா போற்றி
          07 ஓம் அச்சத மூர்த்தியே போற்றி
          08 ஓம் அற்புத லீலா போற்றி
          09 ஓம் அநாதரட்சகா போற்றி
          10 ஓம் அலர்மேல் மார்பா போற்றி

          11 ஓம் அலங்கார பிரியனே போற்றி
          12 ஓம் ஆதிநாராயணா போற்றி
          13 ஓம் ஆயர் கொழுந்தே போற்றி
          14 ஓம் ஆழ்வார் உயிரே போற்றி
          15 ஓம் ஆதிமூலமே போற்றி

          16 ஓம் ஆபத்து சகாயா போற்றி
          17 ஓம் ஆலிலை பாலகா போற்றி
          18 ஓம் ஆனையை காத்தாய் போற்றி
          19 ஓம் ஆனந்த மூர்த்தியே போற்றி
          20 ஓம் இன்னல் தீர்ப்பாய் போற்றி

          21 ஓம் இமையவர் தலைவா போற்றி
          22 ஓம் ஈகை நெஞ்சினாய் போற்றி
          23 ஓம் உலகமுண்ட வாயா போற்றி
          24 ஓம் உம்பர் கோமானே போற்றி
          25 ஓம் எங்கும் நிறைந்தாய் போற்றி

          26 ஓம் எட்டெழுத்தானே போற்றி
          27 ஓம் எழில்மிகு தேவா போற்றி
          28 ஓம் ஏழுமலையானே போற்றி
          29 ஓம் ஏழைப் பங்காளா போற்றி
          30 ஓம் ஒளிமணி வண்ணா போற்றி

          31 ஓம் ஓங்காரப் பொருளே போற்றி
          32 ஓம் கலியுக வரதனே போற்றி
          33 ஓம் கண் கண்ட தேவா போற்றி
          34 ஒம் கருட வாகனனே போற்றி
          35 ஓம் கல்யாண மூர்த்தியே போற்றி

          36 ஓம் கல்மாரி காத்தாய் போற்றி
          37 ஓம் கருட கொடியானே போற்றி
          38 ஓம் கமலக் கண்ணனே போற்றி
          39 ஒம் கஸ்துாரி திலகனே போற்றி
          40 ஓம் கலியுக தெய்வமே போற்றி

          41 ஓம் கார்முகில் வண்ணா போற்றி
          42 ஓம் குன்றம் தாங்கினாய் போற்றி
          43 ஓம் கோவிந்த மூர்த்தி போற்றி
          44 ஓம் கோபியர் லோலா போற்றி
          45 ஓம் கோகுல பாலா போற்றி

          46 ஓம் கோதண்டபாணியே போற்றி
          47 ஓம் சர்வலோக சரண்யா போற்றி
          48 ஓம் சபரிக்கு அருளினாய் போற்றி
          49 ஓம் சகஸ்ரநாம பிரியனே போற்றி
          50 ஓம் சாந்த சொரூபியே போற்றி

          51 ஓம் சங்கடம் தீர்ப்பாய் போற்றி
          52 ஓம் சங்கரப்பிரியனே போற்றி
          53 ஓம் சங்கு சக்கர தாரியே போற்றி
          54 ஓம் சப்தகிரி வாசனே போற்றி
          55 ஓம் சிந்தனைக்கினியாய் போற்றி

          56 ஓம் சீனிவாச பெருமாளே போற்றி
          57 ஓம் சீதேவி நாயகனே போற்றி
          58 ஓம் சுயம்பிரகாசா போற்றி
          59 ஓம் சுந்தர தோளினாய் போற்றி
          60 ஓம் சுந்தரராஜமூர்த்தியே போற்றி

          61 ஓம் செல்வ நாராயணனே போற்றி
          62 ஓம் தசரதன் வாழ்வே போற்றி
          63 ஓம் தசாவதாரம் எடுத்தாய் போற்றி
          64 ஓம் திருமகள் கேள்வா போற்றி
          65 ஓம் திருவேங்கடவனே போற்றி

          66 ஓம் திருமலை உறைவாய் போற்றி
          67 ஓம் திருத்துழாய் பிரியனே போற்றி
          68 ஓம் துருவனைக் காத்தாய் போற்றி
          69 ஓம் துன்பம் தீர்ப்பவனே போற்றி
          70 ஓம் தேவகி பாலகனே போற்றி

          71 ஓம் தோள்மாலை சூடினாய் போற்றி
          72 ஓம் நந்தகோபாலனே போற்றி
          73 ஓம் நஞ்சரவில் துயின்றாய் போற்றி
          74 ஓம் நான்முகன் பிதாவே போற்றி
          75 ஓம் பக்தவத்சலனே போற்றி

          76 ஓம் பக்தர் சகாயனே போற்றி
          77 ஓம் பரந்தாமனே போற்றி
          78 ஓம் பத்மநாபனே போற்றி
          79 ஓம் பரம தயாளனே போற்றி
          80 ஓம் பத்மாவதி துணைவா போற்றி

          81 ஓம் பக்தர் தம் திலகமே போற்றி
          82 ஓம் பாற்கடல் உறைவாய் போற்றி
          83 ஓம் பார்த்தசாரதியே போற்றி
          84 ஓம் பார் புகழ் தேவா போற்றி
          85 ஓம் பாஞ்சஜன்யம் ஏந்தினாய் போற்றி

          86 ஓம் பாண்டவர் துாதா போற்றி
          87 ஓம் பாஞ்சாலியை காத்தாய் போற்றி
          88 ஓம் பாலாஜி வெங்கடேசா போற்றி
          89 ஓம் பிரகலாதப் பிரியனே போற்றி
          90 ஓம் புருஷோத்தமனே போற்றி

          91 ஓம் புண்ணிய மூர்த்தியே போற்றி
          92 ஓம் புரட்டாசி நாயகா போற்றி
          93 ஓம் மகாவிஷ்ணுவே போற்றி
          94 ஓம் மண்மலர் ஏற்றாய் போற்றி
          95 ஓம் மலைமேல் நிற்பாய் போற்றி

          96 ஓம் மலையப்ப சுவாமியே போற்றி
          97 ஓம் மாயக் கண்ணனே போற்றி
          98 ஓம் யசோதை கண்மணியே போற்றி
          99 ஓம் ராமானுஜர் வாழ்வே போற்றி
          100 ஓம் வகுளமாலிகா செல்வனே போற்றி

          101 ஓம் விஜய ராகவனே போற்றி
          102 ஓம் வில்லொடித்த வீரா போற்றி
          103 ஓம் விபீஷணன் வாழ்வே போற்றி
          104 ஓம் வெண்ணெயுண்ட வாயா போற்றி
          105 ஓம் வேங்கடத்துறைவா போற்றி

          106 ஓம் வைகுண்டவாசனே போற்றி
          107 ஓம் வையம் காப்பவனே போற்றி
          108 ஓம் நமோ நாராயணனே போற்றி போற்றி

தொகுப்பு : ஸ்ரீ ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


|| ----------- ஓம் நமோ பகவதே வாசுதேவாய ----------- ||

|| ----------- ஓம் நமோ நாராயணாய ----------- ||


குறிப்பு: தங்கள் வருகைக்கு நன்றி...! மேலும் இப்பக்கத்தில் உருவாகும் பதிவுகள் எங்களது திருநெறிய தமிழோசை - சைவமும் தமிழும் குழும முயற்சியில் உருவானவை, இதனை பிரதி(Copy) எடுக்க அனுமதி கிடையாது.

ஸ்ரீ சிவ அஷ்டோத்திர சதநாமாவளி

சிவனின் 108 திருநாமங்கள் அல்லது சிவாஷ்டோத்தர சத நாமாவளி என்பது சைவர்களின் முழுமுதற்கடவுளான சிவபெருமானின் பெயர்களை கூறி போற்றும் தோத்திரப் பாடலாகும். இப்பாடல்களில் சிவபெருமானின் நூற்றியெட்டுப் பெயர்கள் கூறப்பெற்றுள்ளன. சமஸ்கிருதத்தில் "நமஹ" என்றும் தமிழில் "போற்றி" என்றும் சிவபெருமானின் பெயருக்குப் பின் இணைத்து பாடப்பெறுகிறது. நாம ஆவளி என்பதற்கு பெயர்களின் வரிசை என்று பொருளாகும். சிவபெருமானின் நூற்றியெட்டு பெயர்களை வரிசைப்படுத்தி பூசையின் பொழுது அர்ச்சனை செய்ய ஏதுவாக இத்தொகுப்பு படைக்கப்பட்டது.


இத்தொகுப்பானது சிவபெருமான் அஷ்டோத்திர சத நாமாவளி என்றும், சிவ அஷ்டோத்திர சத நாமாவளி என்றும் அறியப்படுகிறது.

               01. ஓம் சிவாய நமஹ
               02. ஓம் மஹேச்வராய நமஹ
               03. ஓம் சம்பவே நமஹ
               04. ஓம் பினாகிநே நமஹ
               05. ஓம் சசிசேகராய நமஹ

               06. ஓம் வாம தேவாய நமஹ
               07. ஓம் விரூபாக்ஷாய நமஹ
               08. ஓம் கபர்தினே நமஹ
               09. ஓம் நீலலோஹிதாய நமஹ
               10. ஓம் சங்கராய நமஹ

               11. ஓம் சூலபாணயே நமஹ
               12. ஓம் கட்வாங்கிநே நமஹ
               13. ஓம் விஷ்ணுவல்லபாய நமஹ
               14. ஓம் சிபி விஷ்டாய நமஹ
               15. ஓம் அம்பிகா நாதாய நமஹ

               16. ஓம் ஸ்ரீ கண்டாய நமஹ
               17. ஓம் பக்த வத்ஸலாய நமஹ
               18. ஓம் பவாய நமஹ
               19. ஓம் சர்வாய நமஹ
               20. ஓம் திரிலோகேசாய நமஹ

               21. ஓம் சிதிகண்டாய நமஹ
               22. ஓம் சிவாப்ரியாய நமஹ
               23. ஓம் உக்ராய நமஹ
               24. ஓம் கபாலிநே நமஹ
               25. ஓம் காமாரயே நமஹ

               26. ஓம் அந்தகாஸுர ஸூதநாய நமஹ
               27. ஓம் கங்காதராய நமஹ
               28. ஓம் லலாடாக்ஷாய நமஹ
               29. ஓம் காலகாளாய நமஹ
               30. ஓம் க்ருபாநிதயே நமஹ

               31. ஓம் பீமாய நமஹ
               32. ஓம் பரசுஹஸ்தாய நமஹ
               33. ஓம் ம்ருகபாணயே நமஹ
               34. ஓம் ஜடாதராய நமஹ
               35. ஓம் கைலாஸவாஸிநே நமஹ

               36. ஓம் கவசிநே நமஹ
               37. ஓம் கடோராய நமஹ
               38. ஓம் திரிபுராந்தகாய நமஹ
               39. ஓம் வ்ருஷாங்காய நமஹ
               40. ஓம் வ்ருஷபாரூடாய நமஹ

               41. ஓம் பஸ்மோத்தூளித விக்ரஹாய நமஹ
               42. ஓம் ஸாமப்ரியாய நமஹ
               43. ஓம் ஸ்வரமயாய நமஹ
               44. ஓம் த்ரயீமூர்த்தயே நமஹ
               45. ஓம் அநீச்வராய நமஹ

               46. ஓம் ஸர்வஜ்ஞாய நமஹ
               47. ஓம் பரமாத்மநே நமஹ
               48. ஓம் ஸோமஸூர்யாக்நி லோசனாய நமஹ
               49. ஓம் ஹவிஷே நமஹ
               50. ஓம் யக்ஞ மயாய நமஹ

               51. ஓம் ஸோமாய நமஹ
               52. ஓம் பஞ்வக்த்ராய நமஹ
               53. ஓம் ஸதாசிவாய நமஹ
               54. ஓம் விச்வேச்வராய நமஹ
               55. ஓம் வீரபத்ராய நமஹ

               56. ஓம் கணநாதாய நமஹ
               57. ஓம் ப்ரஜாபதயே நமஹ
               58. ஓம் ஹிரண்ய ரேதஸே நமஹ
               59. ஓம் துர்தர்ஷாய நமஹ
               60. ஓம் கிரீசாய நமஹ

               61. ஓம் கிரிசாய நமஹ
               62. ஓம் அநகாய நமஹ
               63. ஓம் புஜங்கபூஷணாய நமஹ
               64. ஓம் பர்க்காய நமஹ
               65. ஓம் கிரிதன்வநே நமஹ

               66. ஓம் கிரிப்ரியாய நமஹ
               67. ஓம் க்ருத்தி வாஸஸே நமஹ
               68. ஓம் புராராதயே நமஹ
               69. ஓம் மகவதே நமஹ
               70. ஓம் ப்ரமதாதிபாய நமஹ

               71. ஓம் ம்ருத்யுஞ்ஜயாய நமஹ
               72. ஓம் ஸூக்ஷ்மதனவே நமஹ
               73. ஓம் ஜகத்வ் யாபினே நமஹ
               74. ஓம் ஜகத் குரவே நமஹ
               75. ஓம் வ்யோமகேசாய நமஹ

               76. ஓம் மஹா ஸேந ஜநகயா நமஹ
               77. ஓம் சாருவிக்ரமாய நமஹ
               78. ஓம் ருத்ராய நமஹ
               79. ஓம் பூதபூதயே நமஹ
               80. ஓம் ஸ்தாணவே நமஹ

               81. ஓம் அஹிர் புதன்யாய நமஹ
               82. ஓம் திகம்பராய நமஹ
               83. ஓம் அஷ்டமூர்த்தயே நமஹ
               84. ஓம் அநேகாத்மநே நமஹ
               85. ஓம் ஸாத்விகாய நமஹ

               86. ஓம் சுத்த விக்ரஹாய நமஹ
               87. ஓம் சாச்வதாய நமஹ
               88. ஓம் கண்டபரசவே நமஹ
               89. ஓம் அஜாய நமஹ
               90. ஓம் பாசவிமோசகாய நமஹ

               91. ஓம் ம்ருடாய நமஹ
               92. ஓம் பசுபதயே நமஹ
               93. ஓம் தேவாய நமஹ
               94. ஓம் மஹாதேவாய நமஹ
               95. ஓம் அவ்யயாயே நமஹ

               96. ஓம் ஹரயே நமஹ
               97. ஓம் பூஷதந்தபிதே நமஹ
               98. ஓம் அவ்யக்ராய நமஹ
               99. ஓம் பகதேத்ரபிதே நமஹ
               100. ஓம் தக்ஷாத்வரஹராய நமஹ

               101. ஓம் ஹராய நமஹ
               102. ஓம் அவ்யக்தாய நமஹ
               103. ஓம் ஹஸஸ்ராக்ஷாய நமஹ
               104. ஓம் ஸஹஸ்ரபதே நமஹ
               105. ஓம் அபவர்க்கப்ரதாய நமஹ

               106. ஓம் அனந்தாய நமஹ
               107. ஓம் தாரகாய நமஹ
               108. ஓம் பரமேச்வராய நமஹ


"நாநாவித பரிமள பத்ர புஷ்பாணி ஸமர்ப்பயாமி"


தொகுப்பு : ஸ்ரீ ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||